Sunday 21 December 2014

Viy (1967) - Russia

=========================================================================
சில திகில் காட்சிகள், என்று 12 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் பார்ப்பது உத்தமம்.
=========================================================================
 சமீபத்தில் 1969 - ஆம் ஆண்டு திரைக்கு வந்த விய் என்ற ரஷ்யா நாட்டு மொழி படத்தை பார்க்க சந்தர்ப்பம் நேர்ந்தது..ஹாரர் பிளஸ் ஃபேந்தஸி வகையில் வெளிவந்த இப்படத்தின் கதை, திரைக்கதையை முறையே Nikolai Gogol மற்றும் Aleksandr Ptushko, ஆகியோருடன் இயக்குனர்களான Konstantin Yershov, Georgi Kropachyov எழுதியிருக்கின்றனர்.

நிக்கொலாய் கோகோல் என்ற உயர்த்தர எழுத்தாளரின் ரஷியன் கதையின் திரைப்பட தழுவலான இத்திரைப்படம், ஒரு பருவ வயது இளைஞனின் மூன்று திடுக்கிடும் நாட்களில் நிகழும் சம்பவங்களையும் உயிர் வாழ்வதற்கு அவன் எடுக்கும் போராட்டங்களையும் பதிவு செய்கிறது.
===================================================================

கோடை விடுமுறை காலம் அது..பள்ளியில் அரையாண்டு முடிந்து ஆதலால்மாணவர்களுக்கு விடுமுறை..அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆனந்த கடலில் விளையாடி பேசிக்கொண்டே தத்தம் இல்லங்களுக்கு பயணம் ஆகிறார்கள்...நேரம் போக போகதனியே பாதைகளில் பிரிகிறார்கள்..இறுதியில் கோமா, தனது இரண்டு நண்பர்களுடன் இரவு பொழுதை கழிக்க, தொலைவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் உள்ள கிழவியின் அனுமதியுடன் தங்குகிறார்கள்.. அங்குதான் அந்த சூனியக்காரி கிழவியின் லீலைகள் தொடங்குகின்றன.தனியே உள்ள கோமாவை மயக்கி கட்டுப்படுத்தி அவனது முதுகில் ஏறிக்கொண்டு பறக்கலாகிறாள்.பயத்தில் தடுமாறும் கோமா, எப்படியோ ஒரு வழியாக தரையில் அந்த கிழவியுடன் விழுகிறான்..விழுந்த வேகத்திலேயே பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து பலத்த அடிக்க, சற்றென்று கோரமாக கிழவி அழகு ரசம் கொஞ்சும் குமரியாக மாறுகிறாள்.

பயத்தோடு ஆச்சரித்தில் மூழ்கிய கோமா, "துண்ட காணும் துணிய காணும்" என்பதை போல ஓடுகிறான்.ஒரு வழியாக தனது பள்ளிக்கு வந்து சேர்கிறான் கோமா.அங்கு தொலைவில் வசிக்கும் பணக்காரர் ஒருவரின் பதின்ம வயது மகள் சாகும் நிலையில் இருப்பதாகவும் அவள் கோமாவின் பேரை குறிப்பிட்டு அவன்தான் அவளுக்கு இறுதி ஜெபம் செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறி, கோமா சில ஆட்களின் துணையுடன் அந்த ஊருக்கு அழைத்து வரப்படுகிறான்.. கொஞ்ச நஞ்சம் ஊசலாடிய அந்த பெண் கடைசியில் செத்தும் போகிறாள்..இறந்து போனவள் அந்த சூனியக்காரி கிழவிதான் என்பதை கோமா அடையாளம் கண்டுக்கொள்கிறான்..தொடர்ந்து மூன்று இரவுகள் அவளது உடலை வைத்து ஜெபம் செய்ய வேண்டும் என்பது தந்தையின் ஆணை..ஒத்துக்கொண்டாய் எனின் தங்கங்கள், இல்லையெனில் உடல் தேயும் அளவுக்கு சாட்டையடிகள்.. பயந்துக்கொண்டே கோமா, உத்தரவை ஒத்துக்கொள்ள பிறக்கிறது முதல் இரவு ....

முதல் இரவு
இறந்துப் போன அந்த இளம் பெண்ணின் உத்தரவில் "மூன்று இரவுகள் தானே, முடித்துவிட்டால் ரெண்டு கையிலும் தங்க காசுகள் தாளம் போடும்" என்று உடன் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே உடல் இருக்கும் தேவாலயத்துக்குள்  நுழைய கதவும் பூட்டப்படுகிறது.."குற்றம் செய்தவன் நெஞ்சம் குறுகுறுக்கும்" என்ற மொழிக்கேற்ப, பயம் அவனது மனதில் ஊஞ்சலாடுகிறது..புனித பைபில் இருக்கும் துணையில் மனதில் தைரியம் கொண்டுவர ஏதேதோ பேசிக்கொண்டே சுற்றி இருக்கும் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கிறான்..ஒரு வழியாக, ஜெபத்தை படிக்க ஆரம்பிக்கும்பொழுது திடீரென்று விழிக்கிறது அவளது  விழிகள்...அப்படியே லாவகமாக எழுந்து வர, பயம் கோமாவை நெருங்குகிறது..அவனை சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்கிறான்கூடவே கடவுளின் புனித வார்த்தைகள் அவன் நாவினிலே அவசர கோலமிட, அவளது ஆவி அவனை நெருங்குகிறது.ஆனால், கோமாவின் பக்கம் வர இயலவில்லை.ஏதோ கண்ணுக்கு தெரியாத வளையம் அவர்களை சுற்றி கோமாவை தாக்குவதிலிருந்து தடுக்கிறது.ஆவியின் முகத்தில் கொலை வெறி கிளம்ப, அவனது குரல்கள் கூடவே அதர, கோழிக்கூவலோடு அந்த இரவு முடிகிறது.  

இரண்டாம் இரவு
பயந்தாலும் தனது உயிரை புனித பைபில் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில், குடிப்போதையில் உளரிக்கொண்டே தேவாலயத்தின் உள்ளே நுழைகிறான் கோமா.பக்கத்தில் செல்லவே பறவைகளின் சத்தங்களோட ஆங்காங்கே பறக்கின்றன..அப்படியே பைபிலை திறக்க அங்கிருந்தும் ஒரு பறவை அவனை பயமுறுத்தியப்படியே மேலே சென்றுவிடுகிறது.முன் எச்சரிக்கையாக, தன்னை சுற்றிலும் சாக்பீஸால் வட்டம் போடவே தனது ஜெபத்தை ஆரம்பிக்கிறான்..இம்முறை சற்றும் எதிர்ப்பாரா வண்ணம், அந்த பிணப்பெட்டி பறந்து அவனை தாக்க வருகிறது..மோத முடியாதப்படி சுற்றிலும் தற்காப்பு வளையம்.அதனது தைரியத்தில் பயத்தோடு புனித வார்த்தைகளை இறைவனை நோக்கி பேச ஆகிறான்..மோதல் அதிகரிக்கிறது..பிணப்பெட்டியின் கதவு பிய்த்துக்கொண்டு அந்த பெண்..அவனை பார்த்தப்படியே பேரை சொன்னப்படியே தாக்க முனைகிறாள்.போராட்டம் உச்சத்தை தொடவே, மீண்டும் கோழிக்கூவலோடு இரவு காலையை காண்கிறது 

முன்றாவது இரவு
பயம் வழக்கத்துக்கு மாறாக பேய்யுச்சத்தை தொடுகிறது..இனிமேல் "என்னால முடியாது என்றப்படியே" அந்த பணக்காரரை சந்திக்கிறான். பேசுகிறான் : கெஞ்சுகிறான்.. விட்டப்பாடில்லை..வேறு வழி இல்லாது சிந்திக்கலானவன், இடத்தை விட்டு தப்பிக்கிறான்.. ஓடினேன்..ஓடினேன் இறுதிவரை ஓடினேன் என்பதை போல ஓடுகிறான்..இறுதியில், தோல்வியே மிஞ்சுகிறது.நொந்துப்போனவன் நன்கு சாராயம் அடித்துவிட்டுதோற்றத்தில் வீரனாக தேவாலயத்தின் உள்ளே செல்கிறான்குடிப்போதையில் தள்ளாடியப்படியே சுற்றிலும் வட்டம் போட்டுக்கொள்கிறான்.. இங்கு....இங்கு...இங்கு.......நிகழும் காட்சிகள்......

  @@ அவற்றை தெரிந்துக்கொள்ள படத்தை பார்ப்பதே உத்தமம்..சற்றுக்கூட எதிர்ப்பாராத பிரமாண்மான இறுதி கிளைமக்ஸ் காட்சிகள் நெஞ்சை மிரட்டும்.இத்திரை அனுபவத்தை பார்த்து ரசிக்க நினைப்பவர்கள், YOUTUBE - FULL MOVIE : VIY (1967) @@
================================================================================

ஃபோக் டேல் அல்லது கிராமிய கதைகள் உலக நாடுகளில் கால காலமாக இருந்து வருவதே..அதில் பல வகையான கதைகள் கருத்துக்கள் இன்றுவரை மக்களால் வரவேற்கப்படுவதோடு ஒரு சாறார்களால் உண்மைச் சம்பவங்களாகவும் மதிக்கப்படுகின்றன..அதில் பல கதைகள் திரைப்படங்களாகவும் உருவெடுத்துள்ளன..அந்த வரிசையில் உக்ரேயினில் பிறந்த மிக சிறந்த ரஷிய எழுத்தாளரான நிக்கொலாய் கோகோல் அவர்கள், 1835 - ஆம் ஆண்டு எழுதிய சிறுக்கதைக்கு திரைவடிவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான் Viy (1967)..காட்சிகள், அமைப்பு என்று எந்த விதத்திலும் ஒரிஜினல் கதைக்கு குறையில்லாது உயிர்க்கொடுத்த இயக்குனர்களுக்கு நன்றிகள் சொல்ல வேண்டும்..

கதாபாத்திர அமைப்புகள் ஒவ்வொன்றும் படத்துக்கு கூடுதலான அம்சங்கள்..அதில் கோமா ப்ருதூஸ் என்ற பிராதான கதாபாத்திரத்தில் வரும் Leonid Kuravlyov..பயம், வியப்பு, காமெடி, என்று அனைத்து விதமான அம்சங்களிலும் அசத்துகிறார்..அங்கங்கு செயற்கை தன்மைகள் முகபாவனையில் தென்ப்பட்டாலும் இது போலான கதைக்கு போதுமான நடிப்பை மிகவும் எளிமையாக பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் தனது நடிப்பை திரையில் பதிக்கிறார்.

 அதோடு, அந்த இளம் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு சிறப்பாக இருக்கும்..படம் முழுவதும் பிணமாக வந்து நம்மையும் சில இடங்களில் பயமுறுத்துகிறார்..அவரது முகத்தில் தெரியும் அந்த வெறி, கோபம், பழிவாங்குதலின் பிரதிபலிப்பு என்று அத்தனையிலும் வந்து பேசாமலேயே வியந்து பார்க்க வைக்கிறார்.
படம் முழுவது பல சிறப்பு அம்சங்கள்..மிகவும் அருமையான முறையில் எடுக்கப்பட்டிருக்கும்.கோமாவை ஊரை விட்டு கூட்டிச் செல்ல வரும் அந்த ஐந்து பேரின் நடிப்பு ஒரு பெரிய ஈர்ப்பு..ஒவ்வொரு முறையும் கோமா தப்பிக்க முயற்சி செய்ய  இவர்கள் வந்து தடுப்பது, குடித்துவிட்டு போதையில் அரட்டை அடிப்பதும் என்று "இது ஹாரர் படமா என்று" நம்ப முடியாதப்படி நடித்திருக்கின்றனர்

கதையின் உச்சக்கட்ட ஆவலும் சுவாரஸ்யங்களும் நிரம்பி வழிவது அந்த மூன்று இரவுகளில்தான்..கோமாவுக்கும் செத்துப்போன அந்த பெண்ணுக்கும் இடையிலான போராட்டம்தான் படத்துக்கு உயிர் நாடி..முழுக்க முழுக்க பார்ப்பவரை திகிலில் மிரட்டவைக்க கூடியவை..// இன்றைய படங்களோடு அதனை ஒப்பிடும்போது சிலருக்கு சிரிப்பும் வரலாம்..அது வேற கதை.// கோமா உளரிக்கொண்டே மந்திரக்கார இளம் பெண்ணின் உடலை பார்த்து பேச, அவளது கண்களிலிருந்து வரும் கண்ணீர் சிகப்பாகிறது..அதன் மூலம் அவளுக்குள் இருக்கும் கோபத்தின் பழுவாங்குதலின் வெறியை காட்டிருப்பார்கள்.ஹாரர் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தவற விடக்கூடாத திரைப்பட தருணங்கள் அந்த மூன்று இரவுகள்..

ஐரோப்பாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான Mosfilm திரைப்பட ஸ்டூடியோவின் தயாரிப்பில் வந்த இத்திரைப்படம், கதையளவில் எந்த விதமான வித்தியாசத்தையும் பேசவில்லை..பல உலக நாடுகளில் பிரசித்துப்பெற்ற கதை.அதனை எவ்வாறாக சொல்லினும், கதையை படித்தவர்களுக்கு பிடிக்காது சலிப்பு தட்டலாம்..

ஆனால், அதற்கு எந்த விதமான இடமும் தராது விசித்திரமான காட்சி அமைப்புகள், கதைக்களம், என்று கதைச்சொல்லலில் புது பாணியை திரையில் ஒரிஜினல் கதையை மாற்றாமல் கொடுத்துள்ளனர்.ஒரு மணி நேரம் ஓடும் ஸிரியல் எபிசோட்டை போல சுமார் 71 நிமிடங்களே ஓடும் இப்படம், பல சிறந்த பொழுதுப்போக்கு அம்சங்களை தாங்கி வந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.இன்னும் சிறிது நிமிடங்கள் ஓடக்கூடாதா என்று சொல்ல வைத்தது.கிரடிட் கார்டு போட்டவுடனே தொடங்கும் பின்னனி இசை..போக போக நெஞ்சை அதன் பக்கம் இழுத்துவிடுகிறது..ஒரு புதுமையான இசைக்கோர்வைகள் படம் முழுவதும்..அதுவும் முக்கியமாக அந்த மந்திரக்கார கிழவி கோமாவின் முதுகி ஏறிக்கொண்டு உயரே பறக்கும்போது ஒலிக்கும் "கோரஸ் வாயிஸ்" மனதை ஏதோ செய்கிறது.நம்மையும் அதனூடே அழைத்து செல்கிறது..அதே போல, கேமராவின் பங்கும் படத்துக்கு மேலும் பலம்.மிகவும் அழகாக பயனித்துள்ளது.

படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மனதோரத்தில் ரீங்காரமிட்ட இன்னும் ஒன்று, விக்ரமாதித்தன் கதைகள்தான்..அதுவும், கோமாவின் முதுகில் கிழவி சவாரி செய்யும் போது விக்கிரமாதித்தன் வேதாளம் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது..நீண்ட நாட்களுக்கு முன்பு தாத்தா கொடுத்த புத்தகம் விக்கிரமாதித்தன்,,பாதியோடு படித்து மீதமிருப்பதை இன்னொரு முறை ஞாபக கதவை தட்டியது இந்த படம்.

தவறு என்பது தவறி செய்வது - தப்பு
என்பது தெரிந்து செய்வது

  என்ற பழைய எம்ஜிஆர் அவர்களின் பாடலை பல முறை கேட்டுள்ளேன்..இது அனுபவ ரீதியில் நான் உணராத ஒன்று.ஏனோ, இந்த படம் மேலோட்டமாக மனதுக்கு சொன்னது..தெரியாமல் செய்த ஒரு குற்றத்துக்காக கோமாவின் மனசாட்சியே அவனை தாக்குவதாக நினைக்கிறேன்.தவறு செய்துவிட்டோம்..அதற்கான மன்னிப்பையும் யாரிடமும் கேட்கவில்லை..அவனது குற்ற உணர்ச்சியே அதி பயங்கரமான பயத்துக்கு காரணமாகிறது..பயத்தை கட்டுப்படுத்தி குடிக்காது இறைவனிடம் தீவிர பக்தியை கொண்டிருந்தால் அவனது நிலைமை மாறியிருக்கலாம்...என்ன இருப்பினும் விதியை வெல்வதென்பது அடிப்படையில் இல்லாத சாபம் என்பது என் தனிப்பட்ட கருத்து.


 சிறந்த திரைப்படைப்புகளுக்கு என்றுமே நீண்ட ஆயுள் உண்டு.. காலங்கள் கடந்தாலும் மக்களின் மனதை விட்டு மறவாமல் இருக்கும்..உலக தரத்தில் அமைந்த படங்களை மொழி, நாடு, இனம் என்று பாராமல் இன்றளவும் நாம் கொண்டாடும் அதே வேளை, இதுவரை எத்தனை தரமான படைப்புகளை நாம் மறந்திருப்போம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்..அவைகளை மீட்டிக்க வேண்டிய அவசியத்தை இந்த படம் உணர்த்தியது.. இணையத்தளங்களில் பல நேரங்களில் கண்ணில் அம்பிடும் படங்களை ரேட்டிங், கதைச்சுருக்கம் போன்றவைகளை படித்து நம்பி, படம் பார்க்காமலேயே ஒரு முடிவுக்கு வந்திடுவோம்..அது தவறு என்று உணர்த்தியது இந்த படம்..சென்ற நூற்றாண்டில் பலராலும் மறக்கப்பட்ட சிறந்த மாஸ்டர்பீஸாகவே இப்படைப்பை நம்புகிறேன்..கண்டிப்பாக திரை ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ரஷிய படம் Viy (1967).

IMDB : 7.2 / 10
MY RATING : 7.5 / 10
நியூஸ் டெலிவரி : Viy (1967), சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஹாரர் படமாம்..உலகளவில் பலராலும் அண்டர்றேடட் செய்யப்பட்ட படைப்பாகவும் கருதப்படுகிறது.. இதே சிறுக்தையை அடிப்படையாக கொண்டு Black Sunday (1960), A Holy Place (1990) Viy.Vozrashchenie (2012) போன்ற படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதில் Viy என்ற வார்த்தை ஒரு கொடிய பேய் அரக்கனை குறிப்பதாகும்.
=======================================================================================
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
=========================================================================================
 ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

Friday 31 October 2014

The Estwood Factor (2010) - உலக சூப்பர் ஸ்டாரின் திரையுலகம்..

கிளிண்ட் ஈஸ்ட்வூட்

இவரை பற்றி தெரியாத சினிமா பார்வையாளர்கள் மிகவும் குறைவு..ஹாலிவுட் என்கின்ற உலகை தாண்டி சர்வதேச அளவில் சினிமாவின் முதன்மை தர சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்பவர்..எந்த ஒரு நடிகருக்கும் உலகளவில் ஒரு உதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் வாழ்பவர்..அதே வேளை, உலக மக்கள், விமர்சகர்கள் என்று அனைவரையும் கவர்ந்த ஒரு உன்னத திறம் படைத்தவர்

ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, கதை, திரைக்கதை எழுத்தாளராக மட்டுமின்றி இசை அமைப்பாளராகவும் பல அவதாரங்களை எடுத்து தான் ஒரு மிகச் சிறந்த கலைஞர் என்பதை சினிமா உலகத்துக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்தி வருபவர்..சினிமாவில் இவர் செய்த சாதனைகளும், முயற்சிகளும், வென்ற விருதுகளுமே அதற்கு சான்று.சார்லி சாப்ளின், ஒர்ஸொன் வெல்ஸ் போன்றவர்களுக்கு பிறகு ஒரு நடிகனாலும் பல பிரிவுகளில் கொடிக்கட்டி நிற்க முடியும் என்பதற்க்கு பல கலைஞர்களுக்கு உதாரணமாக விளங்குபவர்..நான் இங்கு சொல்லும் அனைத்தும் மிகைப்படுத்து வண்ணம் இருக்கலாம்..ஆனால், இதைவிட பல பேரும் புகழையும் பெற்று வாழ்ந்து வரும் எ லிவிங் லஜெண்ட்.       

சமீபத்தில் பார்வைகளில் சிக்கிய அற்ப்புதமான டோக்குமெண்டரி  திரைப்படம்..
ஈஸ்ட்வூட்டின் ரசிகன் என்ற முறையில் அவர் நடித்து, இயக்கிய திரைப்படங்களை பற்றி மேலும், பல தகவல்களையும் அனுபவங்களையும் அறிந்துக்கொள்ள உதவியாக அமைந்த ஒன்று.. 2010 ஆம் ஆண்டில் Richard Schrickel எழுதி இயக்கிருக்கும் இந்த ஆவண படம், பல முக்கியமான ஈஸ்ட்வூட்டின் திரையுலக வாழ்க்கையை மாற்றியமைத்த சிறந்த  திரைப்படங்களை பற்றி பேசுகிறது..இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இப்படம் முழுக்க பின்னனி குரலில் பல தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மோர்கன் ஃப்ரீமனின் குரல்தான்..ஈஸ்ட்வூட்டின் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததோடு மில்லியன் டோலர் பேபி என்ற படத்துக்கு ஆஸ்கர் வென்றவருமான ஃப்ரீமனின் குரல் ஆவணத்தோடு நம்மை வெகுவாக இணைக்கிறது.

  கிளிண்ட் ஈஸ்ட்வூட்டை பற்றி தெரிந்துக்கொள்ள என்னும் ஒவ்வொரு ரசிகரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஆவனங்களில்  இதுவும் ஒன்று..முதல் சில காட்சிகளில் தன்னுடைய ஆரம்ப கால திரைப்பட அறிமுகங்களை பற்றி பேசும் ஈஸ்ட்வூட், தன்னுடைய தந்தையை பற்றியும் சில வார்த்தைகள் பகிர்ந்துக்கொள்கிறார்.கூடவே, தன்னுடைய சிறிய வயதில் தனக்கு பிடித்த சில நடிகர்கள் மற்றும் திரைப்படங்களை பற்றியும் பேசுகிறார்..

60 ஆண்டுகளில் எடுக்கபட்ட டோலர்ஸ் டிரைலோஜியில் பெயரில்லாத கதாபாத்திரத்தில் நடித்து உலக பார்வைகளை தன் பக்கம் இழுத்துக்கொண்ட ஈஸ்ட்வூட் 70 ஆண்டுகளில் ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுக்க தொடங்கினார்..

70 ஆம் ஆண்டுகளில் இவர் இயக்கி நடித்த புகழ்பெற்ற ஆக்சன் படமான Dirtty Harry (1971) மற்றும் அதனை தொடர்ந்து வந்த Sudden Impact (1975), Magnus force (1973), The Enforce (1976) போன்றவைகளின் மூலம் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்ததோடு அதன் கதைகளம், கதாபாத்திரம் மற்றும் சில சுவையான தகவல்களையும் இந்த ஆவண திரைப்படம் நமக்கு சொல்கிறது..அதே போல 80 மற்றும் 90 ஆண்டுகளில் வெளிவந்த Pale rider (1985), Tight Troope (1984), heartbreak Bridge (1986), Bird (1988), Unforgiven (1992), A Perfect World (1993) விருதுகள் வசூல் என்று சக்கை போடு போட்டது மிகப் பெரிய சிறப்பு..இந்த காலகட்டத்தில் இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ஆக்சன், கௌபாய் என்ற வகைகளில் சார்ந்து இருக்கும் வேளையில், பேர்ட், எ பெர்ஃபெக்ட் வேல்ட் போன்ற படங்கள் சற்று விலகி வந்து அதற்குரிய பாணியில் தனித்து நின்றன.இதில் ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டிய பேர்ட் படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்காக பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கது..

என்னதான், பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து உலகளாவிய நிலையில் விருதுகளை வாங்கி நல்ல அங்கிகாரம் கிடைத்த போதிலும் ஈஸ்ட்வூட்டின் திரைவாழ்வில் பெரிய குறையாக இருந்தது ஆஸ்கர்தான்..ஒவ்வொரு கலைஞனின் உயர்த்தர கனவான இந்த ஆஸ்கர் விருதும், 1992 - ஆம் ஆண்டு ஈஸ்ட்வூட்டின் கதவை தட்டியது..இத்தனை ஆண்டுகள் தட்டி கழிந்ததாலோ என்னவோ ஒரே படத்தில் சிறந்த இயக்கம், திரைப்படம் என்று இரண்டு விருதுகள் அவரது விருது பசியை தீர்த்துவைத்தன..அதோடு, 2004 ஆம் ஆண்டு வந்த மில்லியன் டோலர் பேபி படத்தின் மூலமும் ஈஸ்ட்வூட் மேலும் இரண்டு ஆஸ்கர்களை பெற்றுக்கொண்டார்..மேற்ச்சொன்ன பிறகு குறிப்பிடாத நிறைய தகவல்கள் மற்றும் அனுபவங்களை மிகவும் சிறப்பாக இந்த ஆவணம் நமக்கு சொல்கிறது


=========================================
==============================================

இவ்வாவணத்தில் மேலும் சில கூடுதல் சுவாரஸ்யங்களாக படப்பிடிப்பு நடந்த இடங்கள், ஸ்டுடியோக்கள் என்று காட்சிகள் எடுக்கபட்ட இடத்துக்கே கொண்டு சென்று காட்டுகிறார் ஈஸ்ட்வூட்..மேலும், ஈஸ்ட்வூட்டின் ஆஸ்த்தான திரைப்பட உடை அலங்கார நிபுணரான Deborah Hooper அவர்கள் சேர்த்து பொக்கிஷம் போல பாதுகாத்து வரும் ஈஸ்ட்வுட்டின் ஆயிரம் கணக்கான மெமரபல் உடைகளை பார்க்கின்ற வாய்ப்பை இத்திரைப்படம் பெற்று தருகிறது.இதில் ஒரு காமெடி என்னவெனில் ஈஸ்ட்வூட் அணிந்த ஆடைகள் அவருக்கே நினைவில் இல்லை..அத்தனை படங்களிலிருந்தும் ஆயிரம் ஆயிரம் ஆடைகள்..எல்லாமே கண்டிப்பாக பொக்கிஷம்தான்..

சுமார் ஒன்றைரை மணி நேரங்கள் ஓடும் இத்திரைப்படம், 1971 - ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009 - ஆம் ஆண்டு  வரையில் கிளிண்ட் ஈஸ்ட்வூட் என்னும் மகத்தான கலைஞனின் புகழ்பெற்ற சிறந்த படங்களை பற்றிய பல சுவைகரமான அனுபவங்களை தெரிந்துக்கொள்ள துணை செய்கிறது இத்திரைப்படம்..கண்டிப்பாக, அனைவரும் பார்க்க வேண்டிய ஆவணம் இது.
===========================================================================================

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Monday 7 July 2014

The Changeling (1980) - பயங்கரங்கள்..

அது ஒரு அழகான பனி சூழ்ந்து கிடக்கும் பகுதி..டைட்டில் கார்டு போடவே அங்கிருந்து தொடங்குகிறது படம்..குடும்பத்தோடு வெக்கேஷனுக்கு வந்த இடத்தில் கார் பழுதாக ஜோன் ரசல் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் தள்ளிக்கொண்டு வருகின்றனர். வாகனம்தான் ஏதோ கவலையில் பழுதாகிவிட்டதே தவிர, அவர்களின் முகத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் தாண்டவமாடுகின்றது.நல்ல பேச்சுக்களுடனே ஒரு வழியாக போன் பூத்துக்கு வந்து சேர்கிறார்கள்..ரசல் போன் செய்ய பூத்துக்கு போன சமயம், அக்கம் பக்கம் சுற்றி எங்கிலும் வாகனங்கள், ஆள் நடமாற்றம் இல்லாத இடத்தில், தூரத்தில் காரும் இன்னொர் புறத்தில் லாரியும் வருவதை பார்க்கிறார்.ஏதோ ஓரமாக வருவதாக எண்ணி, போன் செய்யும் ரசல்.... வினாடிகள் அதிகரிக்க அந்த இரு வாகனங்களும் ஒன்றொன்றை மோத போவதை உணருகிறார்.பலத்த வேகத்தில் கண் முன் தெரியாமல் அவ்விரண்டும் எதிர்ப்புறத்தில் வர, பார்வைகளின் முன்னே கொஞ்சி களைப்புடன் விளையாடும் மனைவியும் மகளுமே தெரிகின்றனர்...லாரியும், காரும் வேகமாக அருகில் வர ஏதோ அதிர்ச்சியுடன் வெளியே வர முயல....டம்..டம்...பம்..பம்..மனைவி மற்றும் மகளின் வாழ்க்கையோடு காட்சியும் முடிவை காண்கிறது

 சில நாட்கள் கடக்கின்றன...வருத்தங்கள் மறையாத நிலையில் மறக்க வேண்டுமே என்ற நினைப்பில், இசை பேராசிரியரான ஜோன் ரசல் வேறொரு ஊருக்கு குடிவருகிறார்.அழகான சியாட்டில் நகரம் அது.அங்கே இசை பேராசிரியராக வேலைக்கு சேர்கின்றார்.கூடவே தங்குவதற்கும் தனிமையான சூழலில் வாழ்வதற்கும் ஏற்றாற்போல ஒரு பெரிய மேன்ஷனும் வாடைக்கு கிடைக்கிறது.யாருமே பல வருடங்களாக குடி இருக்காத மாளிகை அது..ஒரே ஒரு பணியாளர்..அவரும் காலையில் வந்துவிட்டு வெளிப்புறம், உள்ப்புறம் என்று சுத்தம் செய்துவிட்டு திரும்பிவிடுவார்..இரவு நேரங்களில் தங்க வேண்டிய கட்டாயம் என்பதைக் காட்டிலும் தனிமையே அவருக்கும் பிடித்திருக்கிறது..சில நாட்கள் ஓடுகின்றன..பியானோ, இசை, நண்பர்கள், மாணவர்கள் என்று இப்படியே சகஜமாகவும் கழிகிறது..

இதுவரை சொன்னவை..முதல் 20 அல்லது 25 நிமிடங்கள் வருபவையே...இங்கு தொடங்கும் காட்சிகள்..திரைப்படத்தின் உச்சத்துக்கு செல்பவை..உச்சம் என்ற வார்த்தை அந்த மாளிகைக்கும் பொருந்தும். திடீரென்று கண்ணாடி உடைதல், சில சத்தங்கள் என்று தொடர்ந்து வினோதமான நிகழ்வுகள் மாளிகையின் மேல் மாடியில் நிகழுவதை உணர்கிறார் ரசல். இவை அனைத்தையுமே எதார்த்தமாக பழைய வீட்டில் நிகழும் கோளாருகள் என்று நினைத்துக்கொள்ளும் ரசலுக்கு மேலும் சில அடிகள் விழுகின்றன.இந்த அடிகள் சகஜமானவை அல்ல....இது நாள் தான் ஒருவன் மட்டுமே தனியாக வாழ்வதாக நினைத்து வந்தரின் நெஞ்சை உலுக்கும் வகையில் கண்ணுக்கு தெரியாத பேய் நடமாட்டங்கள் நடப்பதை உணர்கிறார். இதற்கு ஒத்திவைத்தாற் போல அந்த..அந்த..உருவம்..

குழம்பி தவிக்கும் ரசல் சில உதவிகளை நாடுகிறார்..அதன் முதல் கட்டம்தான் இந்த மாளிகையை வாடிக்கைக்கு வாங்கி தந்த நோர்மன் என்ற திருமணமான பெண்..இவரிடம் சொல்லி நம்ப மறுக்க வேற விதமான உதவியை பெறுகிறார்.அதுதான் ஆவிகளோடு தொடர்புக் கொள்ளும் மீடியம்.

இவர்களது உதவியுடன் பல திடுக்கிடும் புதைந்துப்போன ரகசியங்கள் வெளிவருகின்றன..மேலும், இதனை கண்டரிய பல செயல்களை செய்கிறார்..இவை அனைத்தும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர்  நிகழ்வுக்கு கொண்டு செல்கின்றன..உண்மையாக அங்கு நடந்தது என்ன ?? அது உண்மையாகவே பேயா..ஆவியா ?? உயிர் பலிகள், ஏதாவது கெட்டது நிகழ்ந்ததா ?? இவை எல்லாத்துக்கும் உள்ளே இருக்கும் மர்ம முடிச்சுகள், சத்தியங்கள் என்ன ?? என்பதை திரையில் பார்ப்பதே சிறந்த மருந்து..ஒரு புதுமையான அனுபவமாக இருக்கக்கூடும்//


சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் கிடைத்த படமிது.. விமர்சனங்கள், ரசிகர்களின் கருத்துக்கள் என்று பெரும்பாலும் சிறப்பாக இருக்கவே நிறைய எதிர்ப்பார்ப்புகளோடு பதிவிறக்கம் செய்து வைத்தேன்..சில நாட்கள் வேலை பளு, சில நாட்கள் வேறு படங்கள் என்று வாய்ப்பு கிடைக்காமலேயே தட்டிச் செல்ல ஒரு வழியாக பார்த்திட வேண்டுமென்று விடாப்பிடியில் இந்த படத்தை பார்த்தேன்.ஏற்கனவே கதை, காட்சிகள் என்று சிலவற்றை படித்ததாலோ என்னவோ படத்தோடு ஒன்றவே நேரம் பிடித்தது.


எதிர்ப்பார்ப்புகள் பொங்க படத்தை பார்த்தாலே இதான் பிரச்சனை.நல்ல படமெல்லாம் மிளகாய் தூளை கண்ணில் கொட்டின மாதிரியே இருக்கும். ஏதோ ஒரு வழியாக படத்தில் ஒன்றிப்போக, காட்சிகள் நகர நகர நன்றாகவே இருந்தது..படம் முழுவதும் ஏதோ ஒரு விதமான தனிமை உலாவுகிறது. கதாபாத்திரங்களை அதிகரிக்காது, ஒரு குறிப்பிட்ட சூழலை சுற்றியே ஆனால் அதற்கு சற்றுக்கூட சம்பந்தம் இல்லாது காதாபாத்திரத்தை வைத்து திரைக்காட்சிகளை நகர்த்தி இருப்பதே படத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாக இருக்கும்.

படத்துக்கு மிக பெரிய ஆறுதலும் பெரிய பலமே ஜோன் ரசல்-ஆக வரும் ஜோர்ஜ் சி. ஸ்கோட்.குப்ரிக்கின் டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ் படம் பார்த்தவர்களுக்கு இவரை நன்கு தெரியும்.எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட செய்து முடிக்க கூடிய கெட்டிக்காரர்.இயல்பான நடிகர்..இவர் அதுவும் இந்த ஹாரர் படத்தில் நடித்ததே பெரிய சிறப்பு.அவருடைய முக பாவனைகள் அத்தனையும் அருமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிகரட்டை பிடித்துக்கொண்டு வாசிக்கும் பியானோ காட்சி, அப்புறம் அந்த டேப் ரெகோர்டெர் (சுவாரஸ்யமான ஒன்று) காட்சி என்று அசால்ட்டான நடிப்பை கொடுக்கிறார்.

அந்த பழைய அரண்மனையில் பேய் நடமாட்டமோ ஏதோ கெட்ட சக்தியோ உலாவருவதை..சில காட்சிகளின் மூலம் மிகவும் தெளிவாக அதைவிட முக்கியம் உயிரோட்டமாக காட்டிருப்பார்கள்.பியானோ தானாக வாசிக்க தொடங்குவது..தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு நீர் குழாயில் சத்தம் வருவது..மேல் மாடியில் சத்தம்..கண்ணாடி ஜன்னல் உடைவது என்று மெதுவாக ஒவ்வொரு காட்சியையும் பயத்தை கூட்டும் வகையில் இருக்கும்.அதுவும், அந்த மீடியம் காட்சி..அருமையானது.அதுவும் அந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டு, அதை திரும்பி போடவே ஒலிக்கும் குரல்..யெப்பா ஸ்கிரீனில் பாருங்கள்.
கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அன்றைய ஆண்டுக்கான சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று சுமார் ஒன்பது Genie விருதுகளை அள்ளிச் சென்றது..இது எந்தவொரு ஹாரர் படத்துக்கு கிட்டாத அரிய வாய்ப்பு என்பது குறிப்பிடதக்கது.பிரபல இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்ஸசி-க்கு மிகவும் பிடித்த 11 திகில் படங்களில் ஒன்றாக இந்த படத்தை குறிப்பிட்டுள்ளார்.இவரது லிஸ்டில் இதோடு சேர்த்து ஐந்து படங்களை பார்த்தாச்சு.படிக்காதவங்க படித்துட்டு படம் பார்த்துருங்க..அத்தனையும் டெரர் ஆன படங்கள்..பிளீஸ் டோண்ட் மிஸ் தேம்..


இன்றைய சினிமா உலகில் அதிகபட்சமான வன்முறையும் ரத்தங்களும் ஹாரர் படங்களில் வழிந்து ஓடுவதை பார்க்க முடிகிறது.இந்த படங்களை பார்த்து வருபவர்கள் ஒரு வேளை ஏதாவது ஒரு வித்தியாசமான ஹாரர் கிடைக்குமா என்று தோன்றலாம்..அப்படி நினைப்பவர்களுக்கு The Changeling.


The Vanishing (1988) - Netherlands

அற்புதமான நெதெர்லாண்டு நாட்டு சரக்கு இந்த படம்.. ஒரு அழகான வெக்கேஷனில் தன் காதலியான சாஸ்கியாவை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தொலைத்துவிட்டு தேடி அலையும் ரெஃக்ஸ் என்ற இளைஞனின் கதையை மிகவும் நேர்த்தியாக பேசும் திரில்லர் படமிது.சந்தேகமே இல்லாமல், நெதெர்லாண்டு சினிமாவில் ஆக சிறந்த படங்களுல் ஒன்றாகவே இந்த தெ வேனிஷிங்க் படைப்பை கூறலாம்.

செவென் (1994) திரைப்படத்தை பார்த்த ஒரு வித மயக்கத்தில் விக்கிப்பீடியா பக்கம் போக அங்கே எழுதியிருந்த ஒரு விமர்சகரின் வரியை படித்து அசந்துப் போனேன்..இதோ அந்த வரி உங்களுக்காக: John Wrathall wrote, "Seven has the scariest ending since George Sluizer's original The Vanishing..இதற்கு மேல் என்ன வேண்டும் படத்தை பார்க்க..உடனே டவுன்லோட் போட்டு சிறிது காலம் கழித்தே பார்க்க முடிந்தது.அவர் சொன்னது போல, ரொம்பவும் ஆச்சரியமான எதிர்ப்பார்க்காத கிளைமக்ஸ் இந்த படத்தில் உண்டு.பார்வையாளர்களை முழுதாக தன் வசம் ஈர்க்கும் தன்மை அந்த இறுதி காட்சிகளுக்கு உண்டு.

George Sluizer என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் Bernard-Pierre Donnadieu, Gene Bervoets, Johanna ter Steege ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.அந்த வருட சிறந்த படத்திற்கான ஐரோப்பிய விருதை வென்ற இத்திரைப்படம் இன்றுவரை எல்லாத் தரப்பினராலும் சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.1993-ஆம் ஆண்டு இதே படத்தை ஒரே பெயரில் ஆங்கிலத்தில் ரீமேக் செய்த போதிலும் ஒரிஜினலுக்கு நிகராக அசைக்க முடியவில்லை என்பது பலரது கருத்து.படத்தின் டைட்டிலை பார்த்தவுடனே, எனக்கு சட்டென்று உடனே ஞாபகத்துக்கு வந்தது ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938)-தான். ஒருவேளை Vanish என்ற வார்த்தையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

உங்க ஆதரவோடு 

Sunday 15 June 2014

உலக சினிமா : The Cranes are Flying (1957) - Russia

சமீபத்தில் பார்த்து ரசித்து மனதில் நின்ற ஓர் அயல்நாட்டு படைப்பான தெ கிரேன்ஸ் ஆர் ஃப்லாயிங், 1957 ஆம் ஆண்டு சோவியட் யூனியன் என்ற தற்போதைய ரஷியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்.

Director Mikhail Kalatozov (28 December 1903-27 March 1973)
பெரும்பாலான திரை ரசிகர்களால் மறக்கப்பட்ட, இன்று வரை உலகின் முக்கியமான திரைக்காவியங்களாக கருதப்படும் The Unsent Letter (1959), I Am Cuba (1964), and The Red Tent (1971) போன்ற படைப்புகளை எடுத்தவாரன மிக்கையில் காலடொசோவ் - ஜோர்ஜியாவில் பிறந்த சோவியட் யூனியனைச் சேர்ந்த இயக்குனராவார்.பொருளாதார துறை மாணவரான இவர், பின்பு உதித்த சினிமா ஆர்வத்தினால் நடிப்புலகில் நுழைந்தார்.அதை படிப்படியாக மேம்படுத்திக்கொள்ளவே திரை ஒளிப்பதிவாளராக உருவாகினார்.1928 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் ஏதோ ஒரு பிரிவில் முக்கிய அங்கமாக வகித்தாலும் 50, 60 காலக்கட்டத்தில் இவர் இயக்கிய சில படங்கள் டெக்னிக்கல், கதைச்சொல்லலில் உலகளவில் நல்ல பெயரை எடுத்ததோடு கேன்ஸ், கோல்டன் குளோப் போன்ற விருதுகளை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வரிசையில் வெளிவந்து, திரை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சிறந்த இடத்தை பெற்றதோடு கேன்ஸில் சிறந்த திரைப்படம் & நடிகைக்கான விருதை வாங்கிக்கொண்ட படைப்புதான் தெ கிரேன்ஸ் ஆர் ஃப்லையிங் ஆகும்.திரையில், வெரோனிக்கா, போரிஸ், இவானோவிச் ஆகிய பிரதான கதாபாத்திரங்களில் முறையே Tatyana Samojlova, Aleksey Batalov, Vasili Merkuryev ஆகியோர் கதையோடு பொருந்த, மேடை நாடக கதாசிரியரான Viktor Rozov அவர்கள் திரைக்கதையை புனைந்துள்ளார்.

@ The Cranes are Flying (1957) - Russia
@ A Film By Mikhail Kalatozov
@ Written By : Viktor Rozov (play & screenplay)
@ Stars : Tatyana Samojlova, Aleksey Batalov, Vasili Merkuryev

கதைச்சுருக்கம் 
இளம் ஜோடிகளான போரிஸ் மற்றும் வெரோனிக்கா மனப்பூர்வமாக இளமை இன்பத்தில் காதலித்து வருபவர்கள்.இருவரது வீட்டாருக்கும் இது தெரிந்திருந்தும், கண்டு காணாமல் இருக்கவே அவர்களின் உறவு சிறப்பாக தொடர்கிறது.
இப்படியே கடக்க, ஒரு நாள் போர் அறிவிப்பும் வருகிறது.போரிஸ் செல்ல வேண்டிய கட்டாயம்..இது வெரோனிக்காவுக்கு தெரிய வரவே அவள் உடைந்து போகிறாள்திருமணம் செய்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் யுத்தமா ? அவள் நெஞ்சம் துடிக்கவே, கண்கள் கலங்கவே போரிஸ் செல்கிறான்.. அவனுக்காக அவள் காத்திருக்கிறாள்..அவனை பற்றிய எந்த செய்தியும் கடிதமும் வரவில்லை...இதற்கிடையே வெரோனிக்காவின் வாழ்க்கை தடம் மாறுகிறது..புயலும், இடியும், பலத்த மழையும், பல அதிர்ச்சிகள் அவள் வாழ்வில்..

அதுவெல்லாம் என்னென்ன ? போரிஸ் என்ன ஆனான் ? இருவரும் சேர்ந்தனரா ? போன்ற அவசிய கேள்விகளும்க்கு படம் பார்ப்பதே உத்தமம்
@@@=============================@@==============================@@@

படத்தில் முதல் சில காட்சிகளே போதும்..மேற்க்கொண்டு நமது விழிகளை திரைக்குள் செலுத்துவதற்கு.இரண்டு காதலர்களின் தீண்டல், தூண்டல்களை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்கும்..பாதைகளில் காதலில் துள்ளிக்கொண்டே நடந்துச்செல்ல மணிக்கூண்டை காட்டியப்படியே போடப்படும் ஓப்பனிங் கிரடிட் - கூட சுவார்ஸ்யம்தான்..

நாயகியின் விட்டை அடைந்ததும், பெற்றோருக்கு கேட்டுவிடும் என்ற மௌனமாக உரையாடும் பார்வைகள்..அழகு..அப்பா அம்மா தூங்குகிறார்கள் என தனது செருப்பை சுழற்றிவிட்டு, விளக்கை அனைத்தப்படியே அவர்களது பெட்டை எட்டிப் பார்த்துவிட்டு நாயகி வெரோனிக்கா செல்ல அவளது அப்பா சொல்லும் வசனம் "That's what love is..my dear:a harmless mental illness" ஒன்று போதாதா சுவைக்கூட ? அங்கே நாயகி என்றால் இந்தப் பக்கம் நாயகன் போரிஸ், மெதுவாக தன் பாட்டியிடம் பேசிக்கொண்டே அறக்குள் நுழைந்து: தனகு ஜேக்கெட்டை நாற்காலியில் வக்கும் பொழுது, பக்கத்தில் படுத்துறங்கும் ஆடவன் சொல்கிறான் "Did you tear it" அப்பொழுதுதான் புரிந்தது அந்த சட்டையும் அவனது இல்லையென்று..

  இப்படியே முதல் பத்து நிமிடங்களில் காதல் இன்பத்தில் குளிக்கும் போரிஸ், வெரோனிக்கா மற்றும் கண்டும்க் காணாமலும் இடைவெளி விட்டு பழகும் குடும்பத்தையும் வெறும் இரண்டு, மூன்று காட்சிகளில் அமைக்கப்பட்டிருப்பது அருமை..இது என்னவோ நல்ல காதல் படமாக இருக்குமோ என்ற நம்பிக்கையில் பார்க்க...நெஞ்சை பிசைத்தது மீதக்கதை.

அடுத்த காட்சியில் போர் அறிவிப்புக்கு பின், வெரோனிக்காவும் இவானோவிசும் சந்தித்து நடக்கும் அசைவுகள் நாசுக்காக எடுக்கப்பட்டிருக்கும்.. அவனுக்கு அவள் மீதான ஆசையும் வெளிப்படும் இடமது.லாவகமாக பேசி கையை அவள் கையில் வைக்கும் போது அவள் முகத்தில் தென்ப்படும் மாற்றம்..அருமையான தருணம்.அங்கே இசைக்கப்படும் பியானோ ஒலி..என்னவென்று சொல்ல..கச்சிதமாக பொருந்துகிறது.இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் என்னையும் ரசிக்கவைத்தது.படத்துக்கு இசை அத்தனை பலம்..அத நேர்த்தியாக காட்சிகள் ஊடே தடுமாறாமல் பரிமாறிய ரஷியாவின் சிறந்த இசை ஆளுமையான Mieczysław Weinberg அவர்களுக்கு காலம் கடந்த எனது நன்றிகள்

படத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய நடிப்பம்சம் அந்த அம்மா.. வெரோனிக்கா என்ற கேரக்டரில் வாழ்ந்த Tatyana Samojlova - தான்..என்னை ரொம்பவும் கவர்ந்துவிட்டது.அழகாகவும் நடிக்கிறார்..நல்ல நடிப்புக்கான தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்.கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றுவிட்டார்.இவர் நடிப்பில் வந்த Anna Karenina (1967) என்ற காதல் சித்திரத்தையும் டவுன்லோடு போடலாம் என உள்ளேன்..  

பிரபல திரை இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்ஸசிக்கும் ஃபோர்ட் கப்போலோவுக்கும் பிடித்த திரைப்படமான இதில், நடிப்பு என்பதை தாண்டி..புதுமையான கேமரா அசைவுகளுக்கும் நல்ல பெயரைப் பெற்றுள்ளது.ஹென்டத் ஹெல்ட் கேமராக்களை உபயோகித்து, ஒளிப்பதிவாளர் Sergey Urusevsky நிகழ்த்திய முயற்சிகள் இன்றுவரை திரையுலகம் மறக்க முடியாத வண்ணங்களே.இந்த அரிய வகை முயற்சியை இவர் ராணுவத்தில் கேமராமேனாக இருந்த பொழுது கற்றுக்கொண்டதாக தெரிய வருகிறது.முதல்க்கட்ட காட்சிகளில் போரிஸ் மேலே வெரோனிக்காவை பார்த்து கத்தியப்படியே இசையோடு படிக்கட்டில் ஏறிச்செல்லும்போது ஆரம்பமாகும் ஒரு வகை வசீகரிப்பு இறுதி வரை நிலவுவது படத்துக்கு மேலும் ஒரு உறுதி.   

சேவிங்க் பிரைவட் ராயன், ஸிண்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற படங்களை பார்த்தப் பிறகு, என் மனதில் நீண்ட நாட்களாக உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வியை மீண்டும் ஒரு முறை தட்டி எழுப்பியது இத்திரைப்படம். "போர் என்பது உயிர்களை எடுப்பதா ? அல்லது உயிர்களை காப்பாற்றிக் கொடுப்பதா ?" என்பதே அந்த எண்ணம்.உண்மைதான், என் வயதில் எத்தனையோ யுத்தங்களை, இனப்படு கொலைகளை தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் போன்றவைகளின் வழியே கண்ணார காதார எத்தனையோ..பார்த்து..வருந்திய நாட்கள் உண்டு..ஏன் இதுவெல்லாம்..?? 

பெற்ற மகனை போருக்கு அனுப்பி வைத்துவிட்டு, கண்கள் கலங்கி..தினம் தோறும் ஏங்கித்தவிக்கும் குடும்பங்கள் எத்தனை ? காதலனையும், கணவனையும் பிரிந்துவிட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு நின்ற வெரோனிக்கா-க்கள் எத்தனையோபடத்தின் இறுதி காட்சியை இங்கு விவரிக்க முடியாமல் தவிக்கிறேன்..அவ்வளவு மென்மையான மனதை உருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.ஒரு சந்தோஷமான முடிவை சோகத்தோட காட்டிட முடியுமோ ? பிளிஸ் வாட்ச் திஸ் மூவி.

மேற்க்கூறிய பல விடயங்கள் சிலருக்கு மிகைப்படுத்திய வண்ணமாக தோன்றலாம்.அப்படியே இருந்தாலும், ஒரு நல்ல சினிமாவை பலரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதியுள்ளேன்.தாமதமானாலும் சரி, பலரும் தங்களது வாழ்நாளில் தவற விடக்கூடாத படமாக பரிந்துரைச்செய்கிறேன்.

IMDB : 8.2
MY RATING : 8.3 / 10

உங்கள் ஆதரோவோடு,


Related Posts Plugin for WordPress, Blogger...