"ஆங்கில ஹாரர் படமெல்லாம் பார்த்து கிழிச்சிட்ட மாதிரி இத்தாலிக்கு தாவுறியேடா"-னு ஓரளவு உளரிகிட்டேதான் படத்தை பார்க்க தொடங்கினேன். நெடு நாட்களுக்கு முன்பே லூசியோ ஃபுல்ச்சி டைரக்டரை கேள்விப்பட்டு "சரி ஒரு படம் போடுவோம்" என்ற நினைப்பில்தான் டவுன்லோடே போட்டேன்..பலரும் அறிந்திராத படம் வேறு.நல்ல படமுன்னு ஒரு ரெண்டு விமர்சனம் படித்த தைரியத்தில் மதியம் பார்க்க ஆரம்பித்தேன்."ஏண்டா பார்த்தோம்கிற" எண்ணத்தை தவிர மற்ற எல்லாமே வந்தது..1972-ல் எடுக்கப்பட்ட சீரியல் கில்லிங் படமிது.
இத்தாலியில் அதிகமான மக்கள் தொகை இல்லாத ஊரது..எங்கும் சிறுவர்கள் ஊர்வலம்தான்...யாரோ ஒரு பெண் (வழக்கமான கூந்தலை விரித்துவுட்டு) ஏதோ ஒன்றை தோண்டுவதோடு டைட்டல் கார்டு ஓடுகிறது..கடைசியில் அவள் எடுப்பது மண்டை ஓடு..சரி ஏதோ ஆவி சமச்சாரமோ என திரைக்குள் நான் தலையை நீட்ட...சரி விடுங்க.
அங்கு தொடர்ந்து சிறுவர்கள் மர்ம்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.ஒன்று, ரெண்டு என்று லிஸ்ட்டு நீண்டுக்கொண்டு போகவே போலிஸும் விசாரனையில் தீவிரமாக இறங்குகிறது.பலரை விசாரித்து சந்தேகத்தின் பேரில் ஒரு முடிவே கட்டி சிலர் மீது பழி சுமத்தி "அவர்கள்தான் கொலைக்காரர்கள்" என்று போட்டும் தள்ளுகிறார்கள்..இருந்தும் தீருமோ ரத்த வாடை..கொலைகள் மட்டும் தொடர்கிறது..யார் அந்த கொலையாளி ? ஏன் கொள்கிறான் ? போன்ற கேள்விகளுக்கு படம் பார்க்க வேண்டுமென்று நான் ரெகுலரா சொல்லுவேந்தான்..இந்த பிறவில நீங்க இப்படத்தை பார்த்தீங்கனா பெரிய புண்ணியம் பண்ணதா ஆனாலும் ஆகும்..காரணம் முன்பே சொன்னதுதான்..பலரும் காணாத அதிசய படமிது.
இந்த படத்தை எதிர்க்காலத்தில் எனக்கு பிடித்தாலும் பிடிக்கலாம்..ஏனா இன்னிக்கு பிடிக்காதது நாளைக்கு பிடிக்கலாம்..இல்லையா ? "இந்த படத்தையெல்லாம் பார்த்து எழுதி தள்ளி எங்களோட கழுத்த ஏண்டா அறுக்குறனு" அப்படினு நீங்க கேட்டாலும் கேட்கலாம்..நான் முன்னாடியே சொல்லிருந்தாலும் சொல்லிருப்பேன்..இல்லனா மேல பிளாக் டைட்டில் பாருங்க.."நான் பார்த்த படங்களின் அறிமுகமே இது எல்லாம்"..
ஓக்கே அப்புறம் அடுத்த பதிவில் மீட் பண்ணலாம்..சீ யூ.